விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றும் திரட்டும் பணியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விரைவில் தேசிய கட்சி தொடங்கப் போவதாக நேற்று (செப்டம்பர் 12) அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, சந்திர சேகர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தெலுங்கானா இயக்கத்தை தொடங்குவதற்கு செய்தது போல், அறிவில் சிறந்தவர்கள், பொருளாதார நிபுணர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். அதில், தேசிய அளவில் மாற்று கட்சி தொடங்குவது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.
விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும். அதற்கான கொள்கைகள் வகுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை – கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்