Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசென்னையில் நடைபெற்ற தேசிய கால்பந்து போட்டியில் வாகை சூடிய மேற்கு வங்க அணி!

    சென்னையில் நடைபெற்ற தேசிய கால்பந்து போட்டியில் வாகை சூடிய மேற்கு வங்க அணி!

    சென்னையில் நடைபெற்ற தபால் துறையின் 34-ஆவது தேசிய கால்பந்து போட்டியில் மேற்கு வங்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிஸா அணியை வீழ்த்தியது. இதனால்,  34-ஆவது தேசிய கால்பந்து போட்டி சாம்பியனாக மேற்கு வங்க அணி வெற்றிவாகை சூடியது. 

    மேலும், இந்நிலையில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளம் 2-1 என கர்நாடகத்தைச் சாய்த்தது. ஆகவே, கேரளா மற்றும் கர்நாடகா முறையே 3-ஆம் இடமும், 4-ஆம் இடமும் பிடித்தன. 

    போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் சென்னை வருமானவரித் துறை முதன்மை ஆணையர் செல்வகணேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு அஞ்சல் வட்டத் தலைவர் ராஜேந்திர குமார், சர்வதேச கால்பந்து வீரர் முகமது அம்ஜத் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular