Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'சசிகலாவை நாங்கள் வரவேற்போம்' - பாஜக அமைச்சரின் தடாலடி பேச்சால் பரபரப்பு!

    ‘சசிகலாவை நாங்கள் வரவேற்போம்’ – பாஜக அமைச்சரின் தடாலடி பேச்சால் பரபரப்பு!

    அதிமுக-வை கைப்பற்றும் எண்ணத்தோடு செயல்பட்டு வந்த சசிகலா, தற்போது அது முடியாது என்பதை உணர்ந்துள்ளார். சிறைத் தண்டனைக்கு பிறகு, சசிகலாவின் அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, ஓபிஎஸ் தம்பியையும் தன்பக்கம் இழுத்துள்ளார். அண்மையில் பிரதமர் மோடி, அதிமுக நிர்வாகிகளை சென்னை விமான நிலையத்தில் சந்தித்து பேசிய போது, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் ஊக்கப்படுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் சசிகலா பற்றி பேசுகையில், பிரதமர் ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக கட்சியை கைப்பற்ற நினைத்து, சசிகலா எடுத்த அடுத்தடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான பொதுச் செயலாளர் வழக்கு மீதான தீர்ப்பு, அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இதனால், சசிகலாவை விட்டு, அவருடைய ஆதரவாளர்கள் பலரும் வெளியேற யோசித்து வரும் நிலையில், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் சசிகலா. இந்த ஆலோசனையில் தான் தடாலடி அரசியலில் ஈடுபடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சசிகலா.

    அதிமுகவில், சசிகலாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புவதாகவும், அதற்கு ஈபிஎஸ் மறுப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைப்பை சாத்தியப்படுத்தியுள்ள பாஜக மேலிடம், சசிகலாவை அதிமுகவில் இணைத்து வைக்கவே விரும்புகிறது. இந்நிலையில், பாஜகவில் சசிகலா இணைந்தால் அதை நாங்கள் வரவேற்போம் என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது, அதிமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம், அது பாஜக வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் கட்சிக்கும் உறுதுணையாக இருக்கும். இதற்குரிய முயற்சிகளை பாஜக மேலிடம் எடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

    தமிழகத்தில் வேரூன்ற பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பாஜக, அதிமுகவை அதற்கு பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பாஜகவில் சசிகலா இணைந்தால், அதை நாங்கள் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! – கொளுத்துங்க வெடிய…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....