Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மாமன்னன் திரைப்படத்தில் மிஷ்கினா? வெளியான புகைப்படம்!

    மாமன்னன் திரைப்படத்தில் மிஷ்கினா? வெளியான புகைப்படம்!

    பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி நடிப்பில் இறுதியாய் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்தத் திரைப்படத்தில் உதயநிதியுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் காமெடி நடிகர் வடிவேலு நடித்து வருகின்றனர். சேலத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

    சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.

    இந்த படப்பிடிப்பில் பகத் பாசில் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வித்தியாசமான கிராம கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படப்பிடிப்பின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பகத் பாசில் மற்றும் மாரி செல்வராஜுடன் இயக்குனர் மிஷ்கின் இருக்கிறார். மாமன்னன் படப்பிடிப்பில் மிஷ்கின் இருப்பது அவர் படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    mamannan

    ‘மாமன்னன்’ படத்துடன் நடிப்பதை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், விரைவில் படத்தின் வேலைகளை முடித்துக் கொடுக்க நினைத்துள்ளாராம். எனவே, ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமும் இயக்குனரின் முந்தைய இரண்டு படங்களான ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ போல சர்ச்சைகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர்கள் வலுவான அணியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிக வயதான உயிரினம் பற்றிய தெரியாத தகவல்கள்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....