Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'அடித்து சித்திரவதை செய்றா'! சபரிமலை புகழ் ரெகானா பாத்திமாவுக்கு எதிராக தாயார் பரபரப்பு புகார்

    ‘அடித்து சித்திரவதை செய்றா’! சபரிமலை புகழ் ரெகானா பாத்திமாவுக்கு எதிராக தாயார் பரபரப்பு புகார்

    சமூக ஆர்வலர் ஒருவரே அவரது தாயாரை இன்னலுக்கு உள்ளாக்கிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ரெகானா பாத்திமா – கேரளாவை சேர்ந்த  சமூக ஆர்வலர். இவர் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியபோது,  கோவிலுக்குள் சென்றார். இந்நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இவரை பிரபலமாக்கவும் செய்தது. இதுமட்டுமல்லாமல், மாட்டிறைச்சி குறித்து சமூக ஊடகங்களில் காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதனால், ரெகானா பாத்திமா கேரளாவில் சற்றே பிரபலமானவராகத்தான் அறியப்படுகிறார். இந்நிலையில், ரெகானா பாத்திமாவின் தாயார் பியாரி ஆலப்புழா வடக்கு காவல்துறையில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகள் வீட்டில் தங்கி இருந்தபோது தன்னை அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார்.

    மேலும், இதனால் அவரது வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கி இருப்பதாகவும், தனது உறவினர்களை ரெகானா பாத்திமா மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இதன் பிறகு, ரெகானா பாத்திமாவை காவல்துறை நேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து, அம்மாவிடம் நன்முறையில் நடந்துக்கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளனர். 

    சமூக ஆர்வலர் ஒருவரே அவரது தாயாரை இன்னலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அங்கு கேரளாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: 2024-க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ கிளை! மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....