ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தவிக்கும் மீனவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தவிக்கும் மீனவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தவும், தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிடவும், நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசே விழித்துக்கொள்; ஆன்லைன் சூதாட்டம் தமிழ்ச்சமூகத்தை அழித்து விடும் – பாமக தலைவர்