நாமக்கல் தொடக்க பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை உணவு சாப்பிட்டார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில், காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்திலும் முதல் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, நாமக்கல் நகராட்சி கொண்டுசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தினை ஆட்சியர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். மேலும் இருவரும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
மனைவி முன் துப்பாக்கியை நீட்டிய கணவன் தலைமறைவு; விருதுநகரில் பயங்கரம்