மத்திய அசாமில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அசாமில் இன்று காலை 11.57 மணியளவில் நவ்கான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கமானது, ஹொஜாய் நகருக்கு அருகில் உள்ள குவஹாத்தியிலிருந்து கிழக்கே 180 கிமீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அதேபகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று மீண்டும் அதேபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கம் நவ்கான் மாவட்டம் மட்டுமன்றி, மேற்கு கர்பி ஆங்லாங், கர்பி ஆங்லாங், கோலாகாட், மோரிகான் மற்றும் சோனித்பூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முன்னதாக, சிக்கிம் மாநிலத்தில் உள்ள யூக்சோம் நகரில் இன்று (13-02-2022) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்; சிறுமியை மீட்க உதவிய ரோமியோ – ஜூலியட்!