Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஸ்ரீதேவி என்ற பெயரில் 'ஸ்கெட்ச் போட்ட மந்திரவாதி; கேரள நரபலி விவகாரத்தில் நீளும் மரண பட்டியல்..

    ஸ்ரீதேவி என்ற பெயரில் ‘ஸ்கெட்ச் போட்ட மந்திரவாதி; கேரள நரபலி விவகாரத்தில் நீளும் மரண பட்டியல்..

    கேரளாவில் ஒரு தமிழகப் பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் பல பெண்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. 

    கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் அருகே காலடி என்ற பகுதியைச் சேர்ந்த ரோஸ்லின் ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங் அவரது மனைவி லைலா ஆகியோர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

    இந்த வழக்கில் இதுவரை கிடைத்த தகவல்கள் குறித்து கொச்சி நகர காவல்துறை ஆணையர் நாகராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    ரோஸ்லினுக்கு ரூ.10 லட்சம் தருவதாகவும், பத்மாவுக்கு ரூ.15,000 தருவதாகவும் ஆசை காட்டித் தான் பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்று இருக்கிறார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து பெண்கள் இருவரையும் மிக கொடூரமாக கொலை செய்து ரத்தத்தால் நரபலி பூஜையை செய்துள்ளனர். உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாக லைலா கூறினார். அது உண்மைதானா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முகமது ஷாபி ஒரு கொடும் சைக்கோ. அவர் பணத்திற்காக எதையும் செய்வார். இவர் மீது 75 வயது மூதாட்டியை  சித்ரவதை செய்து பலாத்காரம் செய்த வழக்கு உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளன.

    இதையும் படிங்க:ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பில் திடீரென திரண்ட கூட்டம் ! ‘தலைவா… தலைவா…’ என கத்திய ரசிகர்கள்

    16 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய இவர், லாரி டிரைவர், மெக்கானிக், மீன் வியாபாரம், ஓட்டல் என்று பல தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பெண்களின் உடல்களில்  கத்தியால் குத்தி, ரத்தம் கொட்டுவதை பார்த்து ஆனந்தம் கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் மறைவான உறுப்புகளில் கத்தியால் குத்தி ரசிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி கணக்கை தொடங்கி, பலருக்கும் வலை வீசியுள்ளார். 

    பூஜை செய்தால் காசு, பணம் சேரும் என்று முக நூலில் விளம்பரம் செய்துள்ளார். சிலருக்கு ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் காதல் வலையும் விரித்துள்ளார். அதில் தான் பகவல்  சிங்கும் சிக்கியுள்ளார். ஸ்ரீதேவியை கடைசி வரை காதலித்த பகவல் சிங்கிற்கு, காவல்துறை சென்று கூறும் வரை ஸ்ரீதேவி தான் முகம்மது ஷாபி என்பது தெரியாது.

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    ஷாபி சைக்கோ குணத்துடன் செயல்பட்டதால் பத்மா, ரோஸ்லின் மட்டுமில்லாமல்  இன்னும் பல பெண்களை நரபலி கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த பெரும்பாவூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், கொச்சி காவல்துறை துணை ஆணையர் சசீந்திரன் தலைமையிலான சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் சென்ற பெண்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 14 பெண்களும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களும் ஷாபியின் நரபலிக்கு இரையாகி இருக்கலாமா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    குற்றவாளி ஷாபியின் திட்டம்: 

    மந்திரவாதி செயலின் ஒரு பாகமான பூஜை என்று பகவல் சிங்கின் முன்னிலையில் அவரது மனைவியான லைலாவை ஷாபி பலாத்காரம் செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பகவல் சிங்கையும் கொன்று லைலாவை அடைய ஷாபி திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தில் லைலாவும் ஷாபியுடன் இணைத்து தனது கணவனை கொல்ல நினைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் இவர்கள் 3 பேரும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டனர். 

    இவர்கள் மூன்று பேரையும் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் தரப்பில் இருந்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வேறு யாரவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? நரபலிக்கு வேறு ஏதும் நோக்கம் இருக்கிறதா? போன்ற பல தகவல்களை அறிய வேண்டும் என்பதால் 12 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அந்த 3 பேரையும் 12 நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் விசாரணைக்கு கொண்டு செல்லும்போது 3 பேரின் முகங்களை மறைக்க வேண்டுமென காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நொந்துபோன பாகிஸ்தான் முன் குத்தாட்டம் போட்டு வெறுப்பேற்றிய இலங்கை அணி! வைரல் வீடியோ…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....