மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு இளைஞர் அருவாளுடன் சுற்றிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அண்ணாநகர் வெக்காளி அம்மன் கோயில் தெரு பகுதியில் இளைஞர் ஒருவர் மது குடித்துவிட்டு கையில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன.
இந்நிலையில், நேற்றும் அதே பகுதியில் அந்த இளைஞர் கையில் நீண்ட அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டுவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்தக் காணொளியில், அந்த இளைஞர் மிதிவண்டியில் செல்லும் முதியவரை அருவாளை காட்டி ஆபாச வார்த்தைகள் கொண்டு பேசுகிறார். மேலும் அவரை மிரட்டும் தோரணையில் பேசும் காட்சியும் பதிவாகி உள்ளது.
இந்தக் காணொளி தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் அலைந்து திரிந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இளைஞர்கள் தொடர்ந்து ஆயுதங்கள் பயன்படுதத்துவது அதிகரித்து வருகிறது.
வீட்டை அகற்றிய அதிகாரிகள்; தீயில் கருகிய தாய் மற்றும் மகள்!