ராமநாதபுரத்தில் குண்டாசில் சிறை சென்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் ‘பக்கா’ என்கிற பிரபு தேவா. இவருக்கு வயது 28. குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் 2 முறை சிறை சென்று வந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருமணம் ஆகாத நிலையில், இவர் நேற்று தனது தாயாரது வீட்டில் உறங்கினார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் பிரபு தேவா வெளியே வராததன் காரணமாக அவரது தாய் உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு இந்தச் சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபு தேவாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் உணவு டெலிவரி மட்டும் இல்லை.. கஞ்சா டெலிவரியும்தான் – சென்னையில் அதிர்ச்சி!