Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காந்தாரா நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

    காந்தாரா நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!

    சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்தும், இயக்கவும் செய்த படம் ‘காந்தாரா’. சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் இப்படம் வெளியானது. 

    கன்னடத்தில் வெளியாகி யாரும் எதிர்பாரா வகையில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில நாள்களில் இப்படம் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டது. 

    இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும்  பாராட்டி பேசினர். 16 கோடி அளவில் தயாரான இத்திரைப்படம் 375 கோடி அளவில் வசூல் செய்து அசத்தியது. 

    காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகவுள்ளது. அதோடு, இப்படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. 

    இந்நிலையில், சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து. ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. 

    ‘லியோ’ மற்றுமொரு விஜய் படமல்ல; அதுக்கும் மேலே! – லியோ ஸ்பெஷல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....