17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காதலனால் ஷ்ரத்தா 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி சிறுமியை, வாலிபர் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டியதோடு, திருமணத்திற்கு மறுத்தால் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், ஷமன்கஞ் என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுமி பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி பள்ளிக்கு செல்கையில், அதே பகுதியைச் சேர்ந்த முகமது பைஸ் என்ற 21 வயதுடைய வாலிபர் அந்தச் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
அதுமட்டுமின்றி, அவரை திருமணம் செய்துகொள்ளுமாறும், அதற்கு மறுத்தால் துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பதற்றமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இந்தச் சம்பவத்தை கூறியுள்ளார்.
பெற்றோர் உடனே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பிறகு முகமது பைசை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறை கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு; போக்சோ வழக்கில் கைதானவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு!