Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅனுமதி இன்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி- விசாரணையில் தகவல்

    அனுமதி இன்றி இயங்கிய கள்ளக்குறிச்சி பள்ளி விடுதி- விசாரணையில் தகவல்

    கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையிலான குழு கடந்த ஜூலை 20-ம் தேதி விசாரணையில் ஈடுபட்டது. 

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, சக்தி மெட்ரிக் பள்ளி அருகே நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    கடந்த 17-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மறியல் நடைபெற்ற இடத்தில் உடனடியாக குவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினரும் அத்தனியார் பள்ளி அருகே, கடந்த 17-ம் தேதி காலை சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் போராட்டம் வலுத்தது.

    இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர். பள்ளிக்குள் நுழைந்தவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.

    இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.

    பள்ளியில் வன்முறை கட்டுக்கடங்காமல் செல்ல கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் வன்முறை நடைபெற்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குவிக்கப்பட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு வன்முறையாளர்களை விரட்டியடித்த அதிரடிப்படையினர், கடந்த ஜூலை 17ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் மாணவி ஶ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக குழந்தைகள் நல ஆணையர் குழு ஜூலை 21 அன்று விசாரணையில் ஈடுபட்டது. இந்த விசாரணை ஆனது குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்த விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளிடம் நடைபெற்றது. 

    இந்த விசாரணை குறித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி கூறியதாவது :

    கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது. பதிவு செய்யப்படாத விடுதியில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம் . முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கள்ளக்குறிச்சி பள்ளிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு முன் போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....