Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு- 4 பேர் கைது

    கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு- 4 பேர் கைது

    கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக, நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டமானது வன்முறையாக மாறியது.

    இந்நிலையில், கடந்த 17-ம் தேதி காலை மாணவி  ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் பள்ளி அருகே சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மறியல் நடைபெற்ற இடத்தில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அந்நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர். 

    அப்போது, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கும் தீ வைத்தனர். 

    இந்த வன்முறையை கட்டுப்படுத்த, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை பெரும் போராட்டத்துக்கு பிறகு அதிரடிப்படையினர் கலைத்தனர். மேலும், பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் காவல்துறையினர் கொண்டு வந்தனர். 

    இந்த வன்முறைச் சம்பவத்தில் காவல்துறையினர் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.  இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக நேற்று காலை வரை 329 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்,  வன்முறையில் ஈடுபட்ட பலர் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி வன்முறைத் தொடர்பாக 4 இளைஞர்களை நேற்று (ஜூலை 18) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளதாக கூறி சைபர் கிரைம் காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுமட்டும் அல்லாது, தொடர்ந்து காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....