மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கிரிக்கெட் வீரர் ஜடேஜாவும், அவரது மனைவியும் நேரில் சந்தித்தனர்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், இரண்டு கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மோடியும் குஜராத் பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டார். மறுமுனையில் காங்கிரஸ் கட்சிகளும், ஆம் ஆத்மி கட்சிகளும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டப் பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் கட்லோடியா தொகுதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும், மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியும் போட்டியிடுகின்றனர். மேலும், வெளிவந்துள்ள பட்டியலின்படி, பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘ இதோ, குஜராத் தேர்தல் வந்துவிட்டது. இது இருபது ஓவர் போட்டி போல் உள்ளது. இந்த தேர்தலில் என் மனைவி பாஜக வேட்பாளராக அரசியலில் அறிமுகமாகிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது.
இந்நிலையில், குஜராத்திற்கு வருகைத் தந்துள்ள அமித்ஷாவை ஜாம்நகர் விமானநிலையத்தில் ஜடேஜாவும், அவரது மனைவியும் நேரில் சந்தித்து பேசினர். இந்நிகழ்வைச் சார்ந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாஜக பிரமுகரை தாக்கியவரை தட்டி கேட்கச் சென்றவருக்கு அரிவாள் வெட்டு!