Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சருக்கு தொடர்பான 49 இடங்களில் வருமான வரிச்சோதனை

    முன்னாள் அமைச்சருக்கு தொடர்பான 49 இடங்களில் வருமான வரிச்சோதனை

    அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. 

    காமராஜ் கடந்த அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தார். தற்போது, திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 

    இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காமராஜூக்கு சொந்தமான 49 இடங்களில் வருமான வரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    இந்தச் சோதனை குறித்து  லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

    திரு.காமராஜ், (முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாருர் மாவட்டம்) என்பவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை செய்யயப்பட்டது.

    மேற்கண்ட விசாரணையின்போது, 01-04-2015 முதல் 31-03-2021 வரை காமராஜ் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த நேரத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்துக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது. 

    இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விவரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) திரு.காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) Dr.M.K.இனியன், (3) Dr.K.இன்பன், (4) திரு.R.சந்திரசேகரன் (5) திரு.B.கிருஷ்ணமூர்த்தி மற்றும் (6) திரு.S.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022-ம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இந்த வழக்கினைத் தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் 49 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. 

    மேற்கண்டவாறு லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....