Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆடவர் ஐபிஎல் தொடர்; பயிற்சிக்காக சென்னை வந்த எம்.எஸ்.தோனி

    ஆடவர் ஐபிஎல் தொடர்; பயிற்சிக்காக சென்னை வந்த எம்.எஸ்.தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சிக்காக நேற்று இரவு சென்னை வந்தார். 

    மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நான்கு நாட்கள் இடைவெளிக்கு பிறகு, ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. 

    ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்று சொல்லப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. 

    இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

    முன்னதாக சென்னை சூப் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்குமென தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு பயிற்சிக்காக தோனி சென்னை வந்தடைந்தார்.

    சென்னை அணியின் வீரர்கள் அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், ரஹானே உள்ளிட்டோர் ஏற்கனவே சென்னையில் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், தோனியும் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    எழுத்தாளர் கோணங்கி மீது இளைஞர்கள் பாலியல் புகார்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....