இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1-ம் தேதி இந்திய கடல் எல்லையைத் தாண்டியதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
காரைக்கால் மாவட்டத்தில் கீழகாசாகுடி மேடு பகுதியை சேர்ந்த வைத்தியநாதனுக்கு சொந்தமான விசைப்படைகில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஜூன் 30-ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், இவர்களை கைது செய்தனர்.
இதன்பின்னர், பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த 12 மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை