Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: 169 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா..!

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: 169 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா..!

    உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை தொடரில் தற்போது இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் இப்போட்டியானது இப்போட்டியானது, இன்று அடிலெய்ட் மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கியது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணி பேட்டிங்கில் களம்கண்டது. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இன்றைய போட்டி சிறப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கையில், இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்பு, விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் சற்று நிதானமாக விளையாடினார்கள். சிறிது சிறிதாக மட்டுமே ஸ்கோர் சேர்ந்த நிலையில், ரோஹித் சர்மா 27 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். விராட் கோலி-சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப் சிறப்பாக விளையாடும் என எண்ணுகையில், சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்பு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா கோலியுடன் இணைந்து மெல்ல மெல்ல ஸ்கோரை உயர்த்தினார். 

    அதிரடி எதுவும் பெரிய அளிவில் காட்டப்படாமல் மெதுவாகவே ஸ்கோர்கள் உயர்ந்தது. விராட் கோலி 40 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து வெளியேற அணியின் ஸ்கோர் 136-ஆக இருந்தது. இதன்பின்பு களமிறங்கிய ரிஷப் பந்த் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். தமிழக வீரர் அஸ்வின் களத்திற்கு வந்தார். இதனிடையே பாண்டியா தனது வேகத்தை கூட்டினார். கடைசி ஓவரில் பாண்டியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் ஆனார். 

    மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. தற்போது இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஐபிஎல் தொடர்; நடைபெறவுள்ள மினி ஏலம் ..யாருக்கு எவ்வளவு கோடி தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....