நாளை நடைபெற உள்ள ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்தது. பாகிஸ்தானை தவிர இந்திய அணி மற்ற அனைத்து அணிகளுடனும் விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, சில்ஹட்டில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்தியா – தாய்லாந்து ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், இந்தியாவிடம் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்து அணி தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு 8-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் எந்த அணி மோதப்போகிறதென பெரும் கேள்வி நிலவிவந்தது.
இதையும் படிங்க: வாரிசு மற்றும் துணிவு ஒரே நேரத்தில் ரிலீஸ்.. எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள்? – பதிலளித்த சங்கத் தலைவர்!
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் – இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி பெரும் சோர்வுக்குள்ளானது. இந்நிலையில், இந்த வெற்றியை இலங்கை அணி வீரர்கள் கொண்டாடிய விதமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Asia Cup Semi Final win celebration by Sri Lankan team. pic.twitter.com/G2juM0m18a
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 13, 2022
இலங்கையின் இந்த வெற்றி மூலம், நாளை நடைபெற உள்ள ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியானது சில்ஹட்டில் நாளை மதியம் 1 மணியளவில் தொடங்க உள்ளது.