நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்: நுழைவுச்சீட்டு விற்பனையில் சாதனை!