தி.மு.க. ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வி.கே சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தி.மு.க. ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் நிம்மதி இழந்து வேதனையால் தவிக்கிறார்கள்.
ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததால், தி.மு.க.வினரை எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக மக்கள் அமர வைத்துள்ளார்கள். ஆனால், தி.மு.க.வினரோ, தமிழகத்தை ஏதோ இவர்களுக்கே பட்டயம் எழுதி கொடுத்ததுபோல் நினைத்துக்கொண்டு செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதுபோன்ற தி.மு.க.வினர் செய்கின்ற மக்கள் விரோத செயல்களை, ஆட்சியாளர்கள் தடுக்கவில்லை என்றால், அது தமிழகத்தையும், தமிழக மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதை இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தி.மு.க.வினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்! பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு