Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் நேற்று (ஜூலை 21) தேதி அகற்றப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 

    அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி காலை 9 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தை ஓ. பன்னீர்செல்வம் புறக்கணித்தார். 

    மேலும், ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அவரின் ஆதரவாளர்கள் அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து, அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். 

    இதற்கிடையே, அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். அதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு நீடித்தது. இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர அதிமுக தலைமை அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதோடு, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்நது, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆலோசனைக்குப் பிறகு, கட்சி அலுவலகத்துக்கு வந்த வருவாய் கோட்டாட்சியார் அங்கு நடந்த மோதல் குறித்து விசாரணை நடத்தினர். இதன்பிறகு, கட்சி அலுவலகத்துக்குள் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து அவர் வெளியேறிய பிறகு அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். 

    இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், நேற்று ஜூலை 21ம் தேதி வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் தலைமையில் அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன்பின், அதிமுக அலுவலக சாவியை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடன் தமிழக அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

    இந்திய அரசியலமைப்பைக் காப்பாரா புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....