மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
டென்னிஸில் உலகின் மிகச் சிறந்த வீராங்கனையான 41 வயதான செரீனா வில்லியம்ஸ், டென்னிஸில் இருந்து ஒதுங்கி அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார்.
அவரின் சொந்த மண்ணில் கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸில் 3-வது சுற்றில் தோல்வி அடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து அவர், டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அந்தப் போட்டியின் போது ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர்மல்கவிடைபெற்று சென்றார். இதனால் அவர் விளையாடிய அந்தப் போட்டி, செரீனாவின் கடைசி போட்டி என்று கருதப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
தனது முதலீட்டு நிறுவனம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய செரீனா, “நான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஓய்வு என்கிற வார்த்தை எனக்கு ஒருபோதும் பிடிக்காது. நான் மீண்டும் டென்னிஸ் களம் திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனது வீட்டுக்கு நீங்கள் வந்தால் டென்னிஸ் ஆடுகளம் இருப்பதை பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
இந்தச் செய்தி, செரீனாவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிக்ஸர் மழை பொழிந்த ஸ்டோய்னிஸ்! டி20 உலககோப்பையில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா