சென்னை: தமிழக காவல்துறை நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரௌவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் ரௌடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில், முதல் 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 133 முக்கிய ரௌவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பல ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த பிரபல ரௌடிகள் அடங்கும். சிலர் பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:அண்ணன் தலைவர்! தங்கை துணைப்பொதுச்செயலாளர்! திமுகவின் வாரிசு அரசியலை சாடும் தமிழிசை…
அதைத்தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் நடந்த மின்னல் வேட்டையில் 1310 ரௌவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 221 ரௌவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள். 110 ரௌவுடிகள் மீது பிடியானை நிலுவையில் இருந்தது. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
பிடிபட்ட மீதம் உள்ள 979 ரௌவுடிகள், காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள், இவர்கள் மீது நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. இதை, அவர்கள் மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கபடுவார்கள்
இவ்வாறு, அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.