Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை!

    சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை!

    சென்னை: சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

    அதேபோல், சென்னையில் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், சென்னையில் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....