Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி போட்டி: வெற்றி வாகை சூடிய குஜராத், ஹரியானா

    புரோ கபடி போட்டி: வெற்றி வாகை சூடிய குஜராத், ஹரியானா

    புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் ஹரியான ஸ்டீலர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றிப் பெற்றன. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் புனேரி பல்தான் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 51-39 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிப்பெற்றது. 

    குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் களமிறங்கிய, பார்ட்டிக் தஹியா தான் சென்ற ரெய்டுகளின் மூலம் 18 புள்ளிகளை பெற்றார். 

    நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹரியான ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் ஹரியான ஸ்டீலர்ஸை வீழ்த்தியது. ஹரியான அணி சார்பில் மன்ஜித் 7 ரெய்ட் புள்ளிகளை பெற்று அசத்தினார். 

    மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ்  அணிகளும், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதவுள்ளன. 

    இந்தியாவே நடுங்கிய அந்த நாள்; மும்பை டைரீஸ் 26/11 – திரைப்பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....