Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை; விளக்கமளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

    தமிழகம், தமிழ்நாடு சர்ச்சை; விளக்கமளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

    வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தமிழகம், தமிழ்நாடு தொடர்பான சர்ச்சை அதிகளவில் உருவெடுத்து வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்பதை புறக்கணித்து தமிழகம் என ஒரு நிகழ்ச்சியிலும், அதைத்தொடர்ந்து சட்ட சபையிலும் குறிப்பிட்டதே இந்த சர்ச்சைகளுக்கு மூலக்காரணம் ஆனது.

    இந்நிலையில், சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

    2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்த நிகழ்ச்சியில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

    எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பேச்சு அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்களை விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....