Sunday, April 28, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஅரசு பள்ளிகளில் உள்ள 13 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    அரசு பள்ளிகளில் உள்ள 13 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் உடனே நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம், 7,500 ரூபாய்; பட்டதாரிகளுக்கு மாதம், 1௦ ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்க வேண்டும். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த நியமனங்களில் முக்கியத்துவம் அளிக்கவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை, 2023 ஏப்., வரை; 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, 2023 பிப்., வரை, பள்ளி மேலாண்மை குழு வழியாக, தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாகவும், பதவி உயர்வின் வழியாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இந்த தற்காலிக இடங்களை நிரப்ப வேண்டும். இந்த பணிகளை, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இந்த ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் குழு தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....