Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு தாயின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி; நீளும் மரணங்கள்!

    ஒரு தாயின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி; நீளும் மரணங்கள்!

    தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மக்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதோடு, ஒரு சிலர் தற்கொலை செய்து விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டு முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்து அதன் பின் அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாத வகையில், பல இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தனர். கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி தோல்வி அடைந்து அதன்பின் தற்கொலை செய்து கொண்ட உதாரணங்கள் தமிழகத்தில் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டை தடைசெய்ய வேண்டுமென நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 13 பேர் ஆன்லைன் விளையாட்டால் பணம் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

    இவர்களை தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒருநாளில் மட்டுமே பலமுறை வந்து எளிதாக சம்பாதிக்கலாம் என்று ஆசையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் மன வேதனையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

    ஆன்லைன் ரம்மி..

    தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த அப்பெண், ரம்மி விளையாட்டிற்காக தனது 20 சவரன் நகைகளை விற்றதும், தனது சகோதரிகளிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்ததும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    தற்கொலை செய்துக் கொண்ட பவானிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், தாயின்றி அக்குழந்தைகள் எப்படி வளர போகிறார்கள், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆன்லைன் பாலுறவு எனும் புதிய வக்கிரம், ஆபாச இணையதள கார்ப்பரேட் முதலாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இதன் காரணமாக, இலட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி மாநில அரசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், அவ்வழக்குகளில் ஆஜராகவும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் மூத்த வழக்கறிஞர்களால் சுக்கு நூறாக்கப்படுகின்றன. இதனை நாம் கவனிக்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது என்பதுசாதாரண விசயம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரம்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இதற்காக ஒருமித்த கருத்துள்ள ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து, சூதாட்ட தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வராதவரை மாநில அரசுகள் எப்படிப்பட்ட தடைச்சட்டம் போட்டாலும் அவை நீதிமன்றங்கள் மூலம் செல்லாததாக்கப்படும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    கெடிலம் ஆற்றில் நிகழ்ந்த சோக சம்பவம்; தலைவர்கள் இரங்கல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....