சென்னையில் மஞ்சிமா மோகன்-கௌதம் கார்த்திக் திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகர் நடிகைகள் ஒருவர் மீது ஒருவர் காதலில் விழுவது சினிமா ஆரம்பித்த காலந்தோட்டே இயல்பாக நடந்து வரும் ஒன்றுதான். இந்த வகையில், தற்போது நடிகை மஞ்சிமா மோகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கும் அதிகார்ப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
நவரச நாயகன் என்றழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கின் மகன், கௌதம் கார்த்திக். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இவர் உள்ளார். தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுக்கும், கௌதம் கார்த்திக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தேவாராட்டம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், வெளிவந்த செய்திகளை இருவருமே மறுக்கவில்லை. ஆதலால், ஏறத்தாழ மஞ்சிமா மோகனும், கௌதம் கார்த்திக்கும் காதலில் இருப்பது உறுதியானது. இருப்பினும் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை.
இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இருவருமே தங்களது காதலை புகைப்படத்துடன் பதிவிட்டு உறுதிப்படுத்தினர். சமீபத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் தங்களது திருமண தேதியை அறிவித்தனர். அதன்படி, நவம்பர் 28-ஆம் தேதி சென்னை தனியார் இடத்தில் குடும்பங்கள் மட்டும் சூழ நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், அவர்கள் தெரிவித்தது போல இன்று சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்க, மஞ்சிமா மோகன்-கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், தற்போது திருமண புகைப்படங்கள் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.
மஞ்சிமா மோகன்-கௌதம் கார்த்திக் தம்பதியினருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
‘அப்பத்தா’ பாடலைத் தொடர்ந்து வடிவேலு குரலில் வெளிவந்த மற்றொரு பாடல்