Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

    ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

    இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்’ என்று காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....