தன்னை நிர்வாணமாக்கியதால் மாணவி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி தேர்வில் பிட்டுகளை அடிப்பதாக மாணவியை சந்தேகித்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாக்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஏற்பட்ட அவமானத்தால் அந்த மாணவி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். உடனடியாக, அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காவல்துறை மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி தனது வாக்குமூலத்தில், ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கடுமையாக நான் எதிர்த்த போதிலும், சீருடையில் பிட்டுகளை மறைக்கிறாய் என கேள்வி எழுப்பி, வகுப்பறைக்கு அருகிலுள்ள அறையில் தனது ஆடையை கழற்ற செய்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.