Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகால்பந்து வீராங்கனை மரணம்; 10 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு; உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

    கால்பந்து வீராங்கனை மரணம்; 10 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு; உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

    தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா. 17 வயதாகும் பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுடையவராக விளங்கி வந்தார். இதனால், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் படித்து வந்த பிரியாவுக்கு கால்பந்து பயிற்சியின்போது காலில் தசைப்பிடிப்பு எற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, பிரியாவை கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

    ஆனால், பிரியாவுக்கு அதன் பின்னர் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பிரியாவின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, காலை அகற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

    இதனிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. 

    அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    இந்நிலையில், பிரியா மரணம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். 

    அவர் தெரிவித்துள்ளதாவது; 

    மூட்டு அறுவை சிகிச்சை நடந்த போது போடப்பட்ட கட்டு காரணமாக பிரியாவின் உடலில் ரத்த ஓட்டம் தடைபட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. கவனக்குறைவாக இருந்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே பிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரது உடலை எடுத்துச்செல்ல வாகனத்தில் மாற்றப்பட்டபோது, அந்த வாகனத்தை மறித்து, பிரியாவின் உறவினர்களும், நண்பர்களும் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபடுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்கமருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன கால்பந்து வீராங்கனையின் உயிர்…

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....