சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
2023-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஆளுநரின் இன்றைய உரை முக்கியமாக பார்க்கப்பட்டது.
அதன்படியே, இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளை படிக்காமல் அவர் புறக்கணித்துள்ளார். இத்துடன், தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநரின் உரை குறித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று கண்டனம் தெரிவித்தார். ஆளுநரை முதல்வர் விமர்சித்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.
இதனால், தேசிய கீதம் இசைத்து கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் பாணியில் தென்னாப்பிரிக்காவில் புதிய கிரிக்கெட் போட்டி