கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 கோல்களை அடித்த வீரரின் ட்விட் வைரலாகியுள்ளது.
கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியில், பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும், இந்த இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியின் வீரர் எம்பாப்பே நான்கு கோல்களை அடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தி, ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.
இறுதிப்போட்டியின் இரண்டாம் பாதியில் 80, 81 மற்றும் 118-ஆவது நிமிடங்களில் கோலடித்தார், எம்பாப்வே. இதுமட்டுமன்றி, பெனால்டி சூட் அவுட்டில் ஒரு கோல் அடித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார், எம்பாப்வே
இதைத்தொடர்ந்து, மெஸ்ஸி 7 கோல்களை அடித்த நிலையில், எம்பாப்பே 8 கோல்களை அடித்து, உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்ததற்காக தங்க காலணி விருதை வென்றார்.
இந்நிலையில், தற்போது எம்பாப்பே தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ நாங்கள் திரும்ப வருவோம்’ எனப்பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது பெருமளவில் வைரலாகி வருகிறது. இதுவரையில், இப்பதிவுக்கு 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் வந்துள்ளது.
Nous reviendrons. 🇫🇷🙏🏽 pic.twitter.com/Ni2WhO6Tgd
— Kylian Mbappé (@KMbappe) December 19, 2022
அம்மா சென்டிமென்ட்டில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல்… வெளிவந்த அப்டேட்..