திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திக் காட்டுவோம் என எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 35-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் வாசிக்க அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
எம்ஜிஆரை நெஞ்சிலே தாங்கி அவர் விட்டு சென்ற பணிகளை லட்சிய பாதையை தடுமாறாது பயணிப்போம் என அதிமுகவினர் உறுதியற்றனர். மேலும், குடும்ப அரசியலின் மொத்த வடிவம் திமுக. அந்த திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம் என்றும் மக்கள் சக்தியாம் எம்ஜிஆரின் துணை கொண்டு அவர் வகுத்து தந்த பாதையில் வீறு நடை போடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து அதிமுகவினர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மக்களால் சூறையாடப்பட்ட பார்; வெளியான சிசிடிவி வீடியோ!