நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு வருகிற ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-ஆம் ஆண்டு கந்தூரி விழா இன்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த கந்தூரி விழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். இதற்காக வாழை மரங்களும் தோரணங்களும், வண்ண வண்ண விளக்குகள் கொண்டும் அப்பகுதி முழுவதும் அலங்கரிப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சந்தனக் கூடு, ஊர்வலம் நடைபெற உள்ளது. அதன்பின்னர், ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் திருவிழாவும் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பதுக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம்; அதிரடியில் இறங்கிய காவல்துறை!