மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவர்களது மகள் செந்தாமரை ஆகியோர் வழிபாடு செய்தனர்.
பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த முதல்வர் ஸ்டாலின், கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும், அவரது மனைவியான துர்கா ஸ்டாலின் அதீத கடவுள் பக்தி கொண்டவர். முதல்வர் ஸ்டாலின் மனைவியின் நம்பிக்கையில் எந்த தடையும் போடுவதில்லை.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்து துர்கா ஸ்டாலின் தொடர்ந்து பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். மேலும், தற்போதும் பல கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார்.
இந்நிலையில், 104-வது சாய்பாபா சமாதி தினத்தை முன்னிட்டு மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜராஜ சோழன், பிரபாகரனின் வரலாற்று படம் ? சீமான் போட்ட ட்வீட்டால் பரபரப்பு
அப்போது அங்கு சென்று தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவர்களது மகள் செந்தாமரை ஆகியோர் வழிபாடு செய்தனர். மேலும், சாய்பாபா கோயிலை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
வாரம் தோறும் மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் வழக்கமாக செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலில் அண்ணியார் திருமதி.#துர்கா_ஸ்டாலின் அவர்கள் சுவாமி தரிசனம்🙏#DurgaStalin @mkstalin pic.twitter.com/XcCcfVsyzY
— Ramesh Rsp (@RameshRsp7) October 5, 2022