சமூக வலைத்தளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என திமுக கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் குளித்தலை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் மருதூர் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூபாய் 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நோட்டாவில் போட்டி போடுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் போட்டி போடுவதாக குறிப்பிட்டார்.
அதோடு, சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என்று அங்கிருந்து இளைஞர்களிடம் கேட்டுக் கொண்டார்.
திராவிட இயக்கத்தின் கொள்கையையும், திட்டங்களையும் இளைஞர் படையிடம் எடுத்துரைக்க, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர், #ChepaukTriplicane சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. @Udhaystalin அவர்களின் உத்தரவின்படி, (1/2) pic.twitter.com/B6q9QhefIM
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 10, 2022