Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார்' - கவிஞர் வைரமுத்து

    ‘இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார்’ – கவிஞர் வைரமுத்து

    சென்னை: ‘இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார்’ என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மருத்துவர்கள், பாரதிராஜாவை இன்னும் சில நாள்கள் மருத்துவனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறித்தியுள்ளனர். 

    இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள்.

    அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார், கலையுலகை ஆண்டு வருவார்.

    இவ்வாறு வைரமுத்து, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

     

    காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு அபராதம்; நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....