சென்னை: ‘இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார்’ என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மருத்துவர்கள், பாரதிராஜாவை இன்னும் சில நாள்கள் மருத்துவனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறித்தியுள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள்.
அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார், கலையுலகை ஆண்டு வருவார்.
இவ்வாறு வைரமுத்து, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லைசின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை
ஆண்டு வருவார்— வைரமுத்து (@Vairamuthu) August 24, 2022
காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு அபராதம்; நடந்தது என்ன?