நடுவானில் விமானத்தின் உள்ளே திடீரென புகை வரத் தொடங்கியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தலைநகர் தில்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூருக்கு புறப்பட்டது. நடுவானில் 5000 அடி உயரத்துக்கு மேல் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக விமானத்தின் உள் பகுதியிலிருந்து புகை வெளிவரத்தொடங்கியது.
இதனைக் கண்ட பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு உடனடியாக தில்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் இன்று காலை தில்லி நிலையத்தில் மீண்டும் பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, விமானத்தில் பயணித்த ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
#WATCH A SpiceJet aircraft operating from Delhi to Jabalpur returned safely to the Delhi airport today morning after the crew noticed smoke in the cabin while passing 5000ft;passengers safely disembarked: SpiceJet स्पोक्सपर्सन#Video #SpiceJet #Flight #EmergencyLanding #Smoke #Ca pic.twitter.com/xN2dob5uIh
— Sarthak Pandey (@Sarthak77711642) July 2, 2022