Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுடியிருப்புப் பகுதிக்குள் இறந்து கிடந்த புள்ளிமான்; காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

    குடியிருப்புப் பகுதிக்குள் இறந்து கிடந்த புள்ளிமான்; காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

    காஞ்சிபுரத்தில் உள்ள வஞ்சிவாஞ்சேரி குடியிருப்புப் பகுதிக்குள் புள்ளி மான் இறந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வஞ்சிவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் புள்ளி மானின் உடலை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் சரக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் புள்ளி மானின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து, காட்டுப்பகுதியில் மானின் உடலை எரித்தனர். 

    பருவமழை பெய்ததன் காரணமாக இரை மற்றும் குடிநீரை தேடி வரும் விலங்குகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. மேலும் இதுவரை 10 க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உயிரிழந்ததாக அப்பகுதிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரவும் புது வைரஸ்; மக்களுக்கு ஆபத்தா? – மருத்துவ மையம் தந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....