புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று முன்தினம் 7,219 கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று புதிதாக 6,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,62,445 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,974 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,007 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 7,034 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,80,464 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 213.52 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆசிரியர்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?