Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு

    நாட்டில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 6,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,22,774 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,748 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 23 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,273 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 5,916 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,47,756 ஆக அதிகரித்துள்ளது. 

    நாடு முழுவதும் இதுவரை 216.17 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....