சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற பிப்ரவரி 27, 28 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
24.02.2023 முதல் 26.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27.02.2023 மற்றும் 28.02.2023: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேர்தத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேர்தத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர் பெரியசாமி-அன்புமணி ராமதாஸ்