ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்த நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவளிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில், தற்போது இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மநீம நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோர இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் மாளிகை குடியரசு தினவிழா வரவேற்பு அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’