ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க கோரி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கலும் அதைத்தொடர்ந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவும், இதைத்தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக கூறியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதிமுக அந்தத் தொகுதியில் நிற்க தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எடப்பாடி தரப்பினர் ஜெயக்குமார், துரைசாமி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே சமயம், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அன்னமலையை சந்ததி பேசியுள்ளார். மேலும் பாஜக நிர்வாகிகளை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாகவும் சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், மாநில நலன் குறித்து விரிவாக பேசியதாகவும், பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு; 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்