திரையுலகினர் விளையாடும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
திரையுலகினர் பங்குபெற்று விளையாடும் நட்சத்திர விளையாட்டு போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நட்சத்திர விளையாட்டு போட்டி ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (Celebrity Cricket League – CCL) என்று அழைக்கப்படுகிறது. அதிகளவில் ரசிகர்களை கொண்ட இப்போட்டி வருகிற பிப்ரவரி 18-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
இப்போட்டியில் இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. மேலும், ராய்ப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் 19 போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை ரைனோஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், பஞ்சாப் தி ஷேர், பெங்கால் டைகர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் போஜ்புரி தபாங்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக நடிகர் ஆர்யா செயல்படுகிறார். சென்னை அணி தனது முதல் போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு 7 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த போட்டிகள் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நீங்க கஷ்டப்பட்றீங்கனு நினைச்சா… ‘ – ரசிகர்களை கவர்ந்த லவ்டுடே இயக்குநரின் பேச்சு!